Harni Organic Herbals
Organic Dry Herbs And Products
11/04/2023
உயரிய மூலிகை மருத்துவ சிறப்புகளால், திருமருது என சங்ககாலத்தில் போற்றப்பட்ட மருத மரம், மனிதர்க்கு உடற்பிணி தீர்க்கும் அருமருந்தாக, சித்த மூலிகை மருத்துவத்தில் பயன் தருகிறது.
ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மைகொண்ட செழிப்பான மரமான மருத மரத்தில் உள்ள பல வகைகளில், பெரும்பான்மை மரங்கள் மனிதருக்கு நன்மை தருவனவாகவும், சிலவகை மரங்கள் வீடுகளுக்கு வாசல் நிலைக்கதவுகள், ஜன்னல் கதவுகள் செய்யப் பயனாகின்றன. ஆயினும் தற்காலத்தில் வெகு அரிதாகவே, சில இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.
சிவந்த நிற மலர்களையும், வளவளப்பான பட்டைகளையும் கொண்ட, சிவந்த நிறமுடைய மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் பிணிகள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
தமிழகத்தின் கோயமுத்தூர் மாநகர் அருகே, மருதமரங்கள் நிறைந்து சோலைவனமாகத் திகழ்ந்த, தமிழ்க்கடவுள் குமரன் குடியிருக்கும் மலையே, மருதமலை என இன்றும் அழைக்கப்படுகிறது.
வைகை ஆற்றின் கரையோரம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், மருதத்துரை எனும் பெயரில் அழைக்கப்பட்ட அந்நாள் நகரமே, இன்று மருவி, மதுரை என வழங்கப்படுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருத மரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப்போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.
மருதம் பட்டைகளின் மருத்துவ குணங்கள்:
மருதம் பட்டைகள் வியாதி எதிர்ப்பு சக்தி அதிகம் நிரம்பியவை, அத்தகைய ஆற்றலால், உடலில் பல்வேறு முக்கிய உறுப்புகளில் ஏற்படும் புற்று வியாதிகள் அணுகாமல் உடலைக்காக்கும் வலிமை, மருதம் பட்டைக்கு இயல்பாக இருக்கிறது.
உடல் தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பு போன்றவை அகல தீர்வாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது..சுவாச பாதிப்புகளால் உண்டாகும் காச வியாதிகளை போக்க, இந்த மரப்பட்டைகளை, பொடியாக்கி, நீரில் இட்டோ அல்லது பாலில் கலந்தோ தேநீராக பருகிவர, முழுமையாக சுவாச பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
சிறு நீரகத்தில் கற்கள் உண்டாகி, தாங்கமுடியாத அளவில் உடலுக்கு வலியையும் வேதனையையும் கொடுக்கும் ஒரு மோசமான வியாதியாக உருவெடுக்கிறது. அத்தகைய சிறுநீரக கற்கள் முற்றிலும் உடைந்து வெளியேறி, உடலின் வேதனைகள் தீர, மருதம் பட்டையை நீரிலிட்டு காய்ச்சி, தினமும் பருகிவர வேண்டும்.
இதய நோய்கள் ;
இதயம் தொடர்பான வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகிறது, மருதம் பட்டைகள். நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது.
இன்று வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக, மாரடைப்பு காணப்படுகிறது.
உடலின் இரத்த நாளங்களில், உணவு நச்சுக்களால் ஏற்பட்ட கொழுப்புகள் சேர்ந்து, அவற்றால் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் இரத்தம் சுத்திகரிக்கும் தன்மை பாதிப்படைகிறது. இத்தகைய அடைப்பை சரிசெய்யும் வல்லமை, மருதம் பட்டைக்கு உண்டு, இதயத்தை இந்த பாதிப்பிலிருந்து காத்து, இயக்கத்தை சீர்செய்யும் ஆற்றல் வெண் தாமரை மலருக்கு உள்ளது.
மருதம் பட்டை பொடி, வெண் தாமரை பொடி இரண்டையும் கலந்து தினமும் இருவேளை நீரில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ தொடர்ந்து பருகிவர, இரத்த நாள அடைப்புகள் நீங்கி, இதயம் வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும், இதுவரை அச்சுறுத்திய மாரடைப்பு பாதிப்புகள் நீங்கி, உடல் நலமுடன் வாழலாம்.
இந்த மருதம் பட்டை வெண் தாமரை பொடிக்கலவையை டீனேஜ் எனப்படும் வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், சில காலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை, அவர்கள் தவிர்த்துவிடலாம். அதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளை, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்ய, ஆஞ்சியோ உள்ளிட்ட எந்தவித அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய தேவை ஏற்படாமல், உடல் நலனை இயற்கை வழியே காத்துவரலாம்.
01/04/2023
மருது - Terminalia arjuna
කුඹුක්
பயன்கள்
இருதய நோய்.
இதய நோய் மற்றும் நெஞ்சு வலி.
உயர் இரத்த அழுத்தம்.
தேவையற்ற கொழுப்பு.
காது வலி.
வயிற்றுப்போக்கு.
சிறுநீர் பாதை நோய்கள்.
Disorders of the heart and blood vessels. (cardiovascular disease)
Including heart disease and related chest pain.
High blood pressure.
High cholesterol.
It is also used for earaches.
Dysentery.
Diseases of the urinary tract.
හෘද වාහිනී රෝග
හෘද රෝග සහ ඒ ආශ්රිත පපුවේ වේදනාව ඇතුළුව.
අධි රුධිර පීඩනය.
අධික කොලෙස්ටරෝල්.
එය කන් කැක්කුම සඳහා ද භාවිතා වේ.
අතීසාරය.
මුත්රා මාර්ගයේ රෝග.
31/03/2023
செம்பருத்தி - Hibiscus rosa-sinensis.
වද මල.
30/03/2023
குப்பைமேனி - Acalypha indica.
කුප්පමේනිය
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Batticaloa
